இலங்கையில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பகுதியில் 13 இந்திய மீனவர்களுடன் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று (2023.12.06) கைப்பற்றினர். இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதவான் சரோஜினிதேவி இளங்கோவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed